காதல் கணவனை கள்ளக்காதலன் மூலம் வெட்டிக்கொன்ற மனைவி!!(திகில் ஆடியோ)

காதல் மனைவியால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார் வழக்கறிஞர் முருகன்

இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் லோகேஸ்வரியே இந்த கொடூர கொலையை தனது கள்ளக்காதலன் லோகேஸ்வரனுடன் சேர்ந்து செய்துள்ளார்.

தனது வீட்டிற்கு முன்னால் வைத்தே கூரிய ஆயுதத்தால் பல முறை வெட்டப்பட்டு அதிக இரத்தப்போக்கினால் துடிதுடித்து இறந்துள்ளார் வழக்கறிஞர்.

பெற்றோரின் விருப்பத்திற்கு முரணாக காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த முருகனுக்கு காதல் மனைவி செய்த கொடூரம் திண்டுக்கல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த வழக்கறிஞர் தனது தாயாரின் மரண வீட்டிற்கு கூட செல்லவில்லையென ஊர் மக்கள் தெரிவித்தனர்.

கட்டிய மனைவியின் ஆட்டத்திற்கு ஆடிய கணவனுக்கு கிடைத்த பரிசு என திண்டுக்கல் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.